புவியியல் - உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்

 உயிர்ப்புவி இரசாயன வட்டங்கள்

                                                எப்.எம்.நவாஸ்தீன்

பதார்த்தங்கள் வட்டமாகச் செல்லுதல் போசணை வட்டம் என்று அழைக்கப்படுகின்றது. உயிர் இரசாயன வட்டங்கள் சூழல் தொகுதியின் முக்கியமானதொரு செயற்பாடாகவுள்ளது. 

சூழற் தொகுதியிலுள்ள உயிர்க்கூறுகள் நிலைத்திருப்பதற்குப் பதார்த்தங்கள் அல்லது போசணைகள் தேவையாகவுள்ளன. இவை சூழலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. இதனால் உயிர்க்கூறுகள் நுகரும் போசணைகள் மீண்டும் சூழற் தொகுதிக்குள் வெளியிடப்பட்டு மீள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் போசணைகள் வட்டமாகச் செல்கின்றன. இப்போசணைகள் பொதுவாகப் பின்வரும் மூன்று மூலங்களிலிருந்து கிடைக்கப் பெறுகின்றன.

 (அ) வளிமண்டலம்: உ+ம்: நைதரசன், ஒட்சிசன், ...

 (ஆ) மண்ணிலுள்ள பாறைத்துண்டுகள்

 (இ) பிரிகையடைதல் - Decay

இம்மூலங்களிலிருந்து கிடைக்கப் பெறும் பதார்த்தங்கள் வட்டமாகச் செல்கின்றன. இவற்றுள் ஐந்து பிரதான வட்டங்கள் காணப்படுகின்றன.

01.    காபன் வட்டம்

02.    பொசுபரசு வட்டம்

03.    நைதரசன் வட்டம்

04.    சல்பர் அதாவது கந்தக வட்டம்

05.    ஒட்சிசன் வட்டம்

காபன் வட்டம்

சகல உயிர் வாழும் பொருட்களின் அத்தியாவசியமான அம்சமாக காபன் விளங்குகிறது. இது வளிமண்டலம், சமுத்திரங்கள், உயிர்ச்சுவட்டு எரிபொருட்களில் காபனீரொட்சைட்டு வடிவில் காணப்படுகிறது. காபன் வட்டமானது பின்வரும் பிரதான படிநிலைகளைக் கொண்டுள்ளது.

                                     Source: https://www.sciencefacts.net/carbon-cycle.html

  • வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டு தாவரங்களின் ஒளித்தொகுப்பிற்காக உள்ளெடுக்கப்பட்டு குளுக்கோசாக மாற்றப்படுகிறது.
  • தாவரங்களை உண்ணும் விலங்குகள் குளுக்கோசை உடையச் செய்வதுடன் காபனை வளிமண்டலத்திற்கும் சமுத்திங்களுக்கும், மண்ணுக்கும் வெளிவிடுகின்றன.
  • இறந்த தாவரங்கள், விலங்குகளை ஏனைய நுண் அங்கிகள் சிதைவடையச் செய்வதன் மூலம் உயிரற்ற கூறுகள் காணப்படும் சூழலிற்குள் காபனை செல்ல வைக்கின்றன.
  • காபன் வளிமண்டலத்துக்கும் சமுத்திரங்களுக்குமிடையில் பரிமாற்றப்படுகின்றது. சமுத்திரங்களில் உள்ள காபனீரொட்சைட்டின் அளவுமட்டம் அளவுக்கதிகமாகும்போது அது வளிமண்டலத்துக்கு அனுப்பப்பட்டு சமனிலைப்படுத்தப்படுகிறது.

 ஒட்சிசன் வட்டம்

 

Source: https://www.jagranjosh.com/articles/cbse-class-9-science-natural-resourceschapter-notes-1511431495-1

வளிமண்டலத்தில் ஏறத்தாழ 21% ஒட்சிசன் காணப்படுகிறது. இது நீர், காபனீரொட்சைட்டு, தாவரப் போசணைகள், சேதனக் கூறுகளை உருவாக்கும் வகையில் ஏனைய பல முக்கிய மூலகங்களுடன் இணைந்து தாக்கமுறுகின்றது. ஒட்சிசன் வட்டத்தின் படிநிலைகள் பின்வருமாறு காணப்படும்.

  • ஒளித்தொகுப்பின் மூலம் தாவரங்கள் ஒட்சிசனை வளிமண்டலத்துக்கு அனுப்புகின்றன.
  • விலங்குகள் ஒட்சிசனை சுவாசம் மூலம் உள்ளெடுக்கின்றன. உணவில் இருந்து கிடைக்கும் வெல்லத்தை உடைக்க இது பயன்படுத்தப்படுகிறது.
  • விலங்குகளால் வெளியிடப்படும் காபனீரொட்சைட்டு தாவரங்களால் ஒளித்தொகுப்புக்காக உள்ளெடுக்கப்படுகின்றது.
  • ஒட்சிசன் சமுத்திரங்களுக்கும் வளிமண்டலத்துக்குமிடையில் வட்டமாகச் செல்கின்றது. இதன் மூலம் ஒட்சிசன் சமனிலை பேணப்படுகின்றது.

காபன் வட்டம், ஒட்சிசன் வட்டம் என்பனவற்றுக்கிடையிலான தொடர்புகள்

காபன் வட்டம், ஒட்சிசன் வட்டம் என்பன இரு செயன்முறைகளில் தொடர்புகளைக் கொண்டுள்ளன. அவை ஒளித்தொகுப்பும், சுவாசமுமாகும். ஓளித்தொகுப்பினை பச்சைத் தாவரங்கள் மேற்கொள்கின்றன. காபனீரொட்சைட்டு, நீர் என்பன சூரிய சக்தியின் மூலம் குளுக்கோசாக மாற்றப்படுகின்றது. இக் குளுக்கோசே இழையங்களை உருவாக்குவதுடன் அங்கிகளினை வளரவும் மீள்பெருகவும் செய்கின்றது. சுவாசத் தொழிற்பாடு தாவரக் கலங்களாலும் விலங்குகளாலும் மேற்கொள்ளப்படுகின்றது. ஒளித்தொகுப்பினாலும், நுகர்வினாலும் கிடைக்கப் பெறும் குளுக்கோசு, சக்தியாக மாற்றப்படும் முறையே சுவாசச் செயற்பாடு எனப்படுகிறது. இதில் காபன், ஒட்சிசன் ஆகியனவே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒளித்தொகுப்பின் மூலம் காபனீரொட்சைட்டு குளுக்கோசாகவும் ஒட்சிசனாகவும் மாற்றப்படுவதுடன் சுவாசத் தொழிற்பாட்டின் மூலமாக ஒட்சிசனும் குளுக்கோசும் மீண்டும் காபனீரொட்சைட்டாக்கத்துக்குட்பட்டு விடுகின்றன.

 காபன், ஒட்சிசன் வட்டங்கள் மனிதனால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது?

  • மனிதர்களாகிய நாம், சுவாசத்தின் மூலம் ஒட்சிசனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றோம்.
  • உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதனால் ஒட்சிசனின் அளவுமட்டம் குறைவடைவதுடன் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டு அதிகரிக்கிறது.
  • போதுமான மீள்நடுகையின்றி, காடுகள் அழிக்கப்படுகிறது. இது காபனீரொட்சைட்டை உள்ளெடுத்து ஒட்சிசனை வெளியிடும் தாவரங்களை இல்லாதாக்குகின்றது.
  • எமது சமுத்திரங்கள் மாசுபடுத்தப்படுவதனால் தாவரப் பிளாந்தன்கள் அழிக்கப்படுகின்றன. இதன் மூலமாகவும் ஒட்சிசன் அளவு குறைவடைவதற்கும் காபனீரொட்சைட்டை அதிகரிப்பதற்கும் இது வழிகோலுகிறது.

 நைதரசன் வட்டம்

Source:https://www.sciencefacts.net/nitrogen-cycle.html

உயிர்களுக்கு நைதரசன் மிக அவசியமானதாகும். உயிர்க்கூறுகள் புரதங்களையும் னுNயு யையும் ஆக்குவதற்குத் தேவையானதாக உள்ளது. நைதரசன் வளிமண்டலத்தில் 78மூ மான அளவில் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் காணப்படும் இந்நைதரசன் அதே நிலையில் இருக்கும் நிலையில் உயிர்க்கூறுகளுக்கு எவ்விதப் பயனுமற்றதாக உள்ளது. இந்நைதரசனானது புரதங்களாகவும் கருவாக்கப் பொருள்களாகவும் (னுNயு) மாற்றமடைவதற்கும் மீண்டும் நைதரசன் வாயுவாக மாறவதற்குமான வட்டச் செயன்முறை மூன்று முக்கிய படிகளைக் கொண்டு காணப்படுகின்றது.

  1. பற்றீரியா போன்ற சில வகை அங்கிகள் நைதரசன் வாயுவினை நீரினுள் கரையக்கூடிய கூறுகளாக மாற்றுகின்றன. இவ்வாறு நீரில் கரைந்து காணப்படும் நைதரசன் தாவர வேர்களால் உறிஞ்சப்படுகின்றது. இச்செயன்முறையே நைதரசன் பதிக்கப்படல் (Nitrogen Fixation) எனப்படுகின்றது.
  2. தாவரங்கள் உள்ளெடுத்த நைதரசன் கூறுகளை புரதங்களாகவும் கருவாக்கப்பொருள்களாகவும் (DNA) மாற்றுகின்றன. விலங்குகள் தமக்குத் தேவையான நைதரசனை தாவரங்களையும் ஏனைய விலங்குகளையும் உண்பதால் பெற்றுக் கொள்கின்றன.
  3. தாவரங்களும் விலங்குகளும் இறந்து பொருட்களாக மாறுகின்றன. இவற்றில் இருந்து மீண்டும் நைதரசனை பற்றீரியாக்கள் வாயுவாக மாற்றி நைதரசன் வட்டத்தைப் பூர்த்தி செய்கின்றன.

 நைதரசன் வட்டத்தை மனிதன் பாதிக்கும் மூன்று வழிகள்

நைதரசன் வட்டத்தை மனிதன் பின்வரும் மூன்று வழிகளில் பாதித்து வருகின்றான்.

  1. உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரித்தல்: இதனால் வளிமண்டலத்தில் நைதரசன் கூறுகள் வெளிவிடப்படுகிறது. இது நைத்திரேற்று அமிலங்களாக மாறுகின்றது. இது அமில மழைக்கு வழிகோலுகிறது.
  2.  நாம் வயல்களுக்கும் ஏனைய பயிர் நிலங்களுக்கும் பசளை இடுகின்றோம். நைதரசனைக் கொண்டுள்ள பசளைகள் விவசாயப் பொருட்களின் உற்பத்தித் திறனுக்கு மிகவும் தேவையானவையாகும். இவை தரைக்கீழ் நீர், ஏனைய நீர்நிலைகளில் கலந்து விடுகின்ற சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் மிகையான நைதரசன், நீர் நிலைகளில் உள்ள அல்காக்களை விரைவாகப் பெருகச் செய்கிறது. இதனால் நீர்நிலை சூழற்றொகுதிகள் பாதிப்படைகின்றன.
  3. குறிப்பிட்ட அறுவடைச் செயற்பாடுகளின் மூலம் மண்ணில் இருந்து கிடைக்கப் பெறும் நைதரசன் கூறுகளை நாம் அழிவுறச் செய்கிறோம்.

 பொசுபரசு வட்டம்

Source:https://www.sciencefacts.net/phosphorus-cycle.html

தாவரங்கள், விலங்குகளுக்குத் தேவையான ஒரு போசணைப் பொருளே பொசுபரசாகும். இது னுNயு எனும் பரம்பரை அலகுகளின் ஒரு பகுதியாக விளங்குவதுடன் என்புகள், பற்களிலும் சேமிக்கப்பட்டிருக்கும். இது குறிப்பிட்ட சில பாறைகளில் இருந்து உருவாகுவதுடன் மிகச் சிறிய அளவிலேயே காணப்படுகின்றது. ஆகவே பொசுபரசு பல தரைசார் மற்றும் நீர்சார் சூழற்தொகுதிகளில் தாவரங்களின் வளர்ச்சியை வரையறுக்கும் ஒரு காரணியாகப் பொசுபரசு விளங்குகிறது. பொசுபரசு வட்டத்தின் பிரதான படிகள் பின்வருமாறு:

  • பொசுபரசைக் கொண்டுள்ள பாறைகள் வானியாழிதலுக்குட்படுவதனால் பொசுபரசு விடுவிக்கப்படுகிறது.
  •  மண்ணில் அல்லது நீரில் இருந்து தாவரங்கள் பொசுபரசைப் பெறுகின்றன. தாவரங்களையும், பிற விலங்குகளையும் உண்பதனால் விலங்குகள் தமக்குத் தேவையான பொசுபரசைப் பெற்றுக் கொள்கின்றன.
  •  தாவரங்களும் விலங்குகளும் பிரிந்தழிவதனால் மண், நீர் ஆகியவற்றுக்கு பொசுபரசு வெளிவிடப்படுகிறது.

 

பொசுபரசு வட்டத்தை மனிதன் பாதிக்கும் இரு பிரதான வழிகள்:

  1. வர்த்தக நோக்கில் அசேதனப் பசளையை உற்பத்தி செய்வதற்காக, பொசுபரசைக் கொண்டுள்ள பாறைகளை அதிகளவில் நாம் அகழ்ந்தெடுக்கிறோம்.
  2. விலங்குக் கழிவுகள், பயிர் நிலங்களில் இருந்து வழிந்தோடும் செயற்கைப் பசளைகள், நகரக் கழிவுகள் போன்றவற்றின் மூலம் மிகைப்பட்ட அளவில் பொசுபரசை நாம் சூழலுக்கு வெளிவிடுகின்றோம். நைதரசன் கூறுகளைப் போன்றே இதுவும் நீர்நிலைகளில் மிக அதிகளவிலான அளவில் அல்காக்களையும் நீர்வாழ் தாவரங்களையும் வளர்ச்சியடையச் செய்கின்றன. இதனால் நீர் சூழல் தொகுதிகளுக்கு இடையூறு விளைவிக்கப்படுகின்றது.

 

இவ்வட்டங்கள் எவ்வாறு ஒன்றுடனொன்று இடைத்தாக்கம் புரிகின்றன?

சகல போசணை வட்டங்களும் பல்வேறுபட்ட அளவில் பௌதீகச் சூழலுடன் இடைத்தொடர்புறுகின்றன. ஒளித்தொகுப்பு, சுவாசம் ஆகியவற்றின் மூலம் காபனும், ஒட்சிசனும் பின்னிப் பிணைந்த செயன்முறைகளைக் கொண்டுள்ளன. நைதரசன் வட்டமானது இழந்த சேதனப் பொருட்களை மீள உருவாக்கவும் காபன், ஒட்சிசனை பேணும் வட்டமாகச் செல்லும் வகையிலும் வெளிவிடுகின்றது. பொசுபரசு வட்டம் ஏனைய வட்டங்களது உயிரியல் கூறுகளுக்குப் போசணைப் பெறுமதியை வழங்குகிறது. நீரியல் வட்டம் இறுதியாக இம்மூலக்கூறுகள் தொகுதிகளுக்கிடையில் செல்லும் வகையில் உதவுவதாக உள்ளது. இம்மூலக்கூறுகளினதும் வட்டங்களினதும் இடைவினைகளே எமது உயிர்க் கோளத்தை உருவாக்குகின்றன.

 இப்போசணைகள் பின்வரும் மூலங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும்.

   (அ)   உயிர்த்திணிவு – Biomass

                   உ+ம்: அயன மழைக்காடுகள்

 (ஆ)   மண் - Soil

                   உ+ம்: புல்வெளிகள்

 (இ)   குப்பை – Litter

                   உ+ம்: ஊசியிலைக்காடுகள்

இவ்வாறு சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போசணைகள் ஓர் வட்ட அடிப்படையில் சென்ற வண்ணமிருக்கும். 

 சூழற்தொகுதியில் மனிதனின் தாக்கங்கள்

இன்று எமது நடவடிக்கைகளின் காரணமாக சூழற் தொகுதி உட்பட முழு புவித் தொகுதியும் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றது. எமது நடவடிக்கைகளினால் நாம் இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகள் ஏராளமாகும். அவற்றுள்;     

        நற்போசனையாக்கம் (Eutropism)

        திரட்சியடைதல் (Accumulation)

        பச்சை வீட்டு விளைவு (Green House Effect)

        பூகோளம் வெப்பமடைதல் (Global Warming)

        அமில மழை (Acid Rain)

        காடுகள் அழிப்பு (Deforestation)

        ஓசோன் படல அழிவு (Depletion of Ozone Layer)

        உயிர்ப் பல்வகைமை அழிவு (Loss of Bio diversity)

போன்றவை முக்கியம் பெறுகின்றன.

 

சூழற் தொகுதியில் ஏற்படும் தாக்கங்கள்

 சூழற்தொகுதி பல்வேறு வழிகளில் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இவற்றுள்,

(1)     நற்போசணையாக்கம்

(2)     திரட்சியடைதல்

ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

 

(1)     நற்போசணையாக்கம்

விவாசாயப் பயிர்ச்செய்கைகளுக்கு இடப்படும் பசளைகள், வளமாக்கிகள் நீரினால் கழுவப்பட்டு நீர்நிலைகளை அடையும் போது அங்கு காணப்படும் உயிரினங்கள், கழுவப்பட்டு வந்த போசணைப் பொருட்களினால் நற்போசணையாக்கத்திற்கு உள்ளாகின்றன. இதன் காரணமாக சூழல் தொகுதியில் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்படுகின்றன. உ10ம்: சல்வீனியா தாவரத்தின் பெருக்கம். இத்தகைய நற்போசணையாக்கம் மனிதர்களிடத்தும் காணப்படுகிறது.

 

(2)     திரட்சியடைதல்Accumulation

நச்சுப் பொருட்கள் சூழற் தொகுதியின் போசணை மட்டங்களுக்கிடையில் செறிவடைந்த வகையில் அதிகரித்துச் செல்லும் போக்கு திரட்சியடைதல் எனப்படும்.

மனிதர்களால் சூழற்தொகுதிக்கு வெளிவிடப்படும் பல நச்சுப் பொருட்கள் (உ+ம்: DTT) இலகுவில் பிரிகையடையாது காணப்படும். இவை மற்றொரு போசணை மட்டத்துக்கு கடத்தப்படும்போது அதன் செறிவுத் தன்மை அதிகரிக்கும். இவ்வாறு அதிகரித்துச் செல்வதனால் உணவுச் சங்கிலிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.


திரட்சியடைதலுக்கு குறிப்பிடத்தக்க உதாரணமாகப் பின்வரும் சம்பவத்தைக் கூறலாம்.

யப்பானிலுள்ள மினாமாட்டா குடா 'ஷெல்பிஷ்' மீனினங்களுக்குப் பிரசித்தம் வாய்ந்த இடமாகும். இக்குடாவினை அண்டி ஒரு இரசாயனத் தொழிற்சாலை காணப்பட்டது. 1950 களில் இக்குடாப் பகுதியில் வசித்த பாலூட்டிகள் அசாதாரண போக்குகளைக் காட்டின. அதேபோன்று மனிதர்களும் தலைபிடி 'பார்வை இழப்பு' பேச முடியாது போதல் போன்றவற்றிற்கு ஆளாகினர். 45 பேர் வலிப்பினால் இறந்து போயினர். இதற்கான காரணத்தை தேடிக் கண்டுபிடித்த போது திடுக்கிடும் உண்மை வெளிப்பட்டது. அதாவது இக்குடாவின் அருகே அமைக்கப்பட்டிருந்த இரசாயனத் தொழிற்சாலையிலிருந்து இரசம் என்ற இரசாயனப்பொருள் நீர்நிலைகளில் கலந்துவிட்டது தான் எனத் தெரிய வந்தது. இது 'மினமட்டா' நோய் எனப்பட்டது. இந்நோயினால் 35000 பேர் பாதிக்கப்பட்டனர். இதேபோன்று எண்ணெய்க்கசிவுகள், கப்பல்கள் விபத்துக்குள்ளாகுதல் போன்றவற்றினாலும் திரட்சியடைதல் ஏற்படுகின்றது.

 

பச்சை வீட்டு விளைவும் புவி வெப்பமடைதலும்

 

Soure:https://www.pinterest.com/pin/54887689184097710/

உவப்பற்ற காலநிலையில் தாவரங்களை வளர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கூடாரத்தை பச்சை வீடு என்று அழைப்பர். இப்பச்சை வீட்டின் சிறப்பம்சம், உரிய தாவரத்துக்குரிய வெப்பத்தினை பேணுவதாகும். இதே போன்றதொரு தொழிற்பாட்டினை எமது வளிமண்டலமும் ஆற்றுகின்றது.

சூரியனிலிருந்து சிற்றலைக் கதிர்களாக புவியினை நோக்கி வரும் கதிர்வீசலில் புவிக்குத் தேவையான வெப்பத்தினை வளிமண்டலம் உட்புக விடுகின்றது. இவ்வாறு புவியை வந்தடைகின்ற வெப்பம் இரவில் நெட்டலைக் கதிர்வீசலாக வீசப்படும்போது வளிமண்டலமானது அதனைத் தடுத்து புவி வளிமண்டலத்திற்குத் தேவையான வெப்பத்தை பேண உதவும். வளிமண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட்டு, நீராவி போன்றன வெப்பத்தை உறிஞ்சி வைத்துக் கொள்ள உதவுகின்றன. இதனையே பச்சை வீட்டு விளைவு என்பர். இது உண்மையிலேயே புவியியற் செயற்பாட்டுக்கு மிக இன்றியமையாததாக உள்ளது. ஆயினும் இத்தகைய செயற்பாடானது அண்மைக்கால மனித நடவடிக்கைகளின் மூலமாக அபாயகரமாக மாறியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது.

மனித நடவடிக்கைகளின் மூலமாக வளிமண்டலத்தில் காணப்படுகின்ற பச்சை வீட்டு வாயுக்கள் (காபனீரொட்சைட்டு, மீதேன், நைதரசு ஒக்சைட்டு, அலோ-காபன்கள், தாழ் மண்டல ஓசோன் வாயு) அதிகரிக்கின்றன. இதன் காரணமாக வளிமண்டலத்தினால் தங்க வைக்கப்படும் வெப்பத்தின் அளவும் கூடுகின்றது. இதன் மூலம் வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரிக்கப்படும்போது புவியின் வெப்பநிலையும் அதிகரித்து புவியின் உயிர்வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகின்றது.

இவ்வாறு வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக உலகில் பல விரும்பத்தகாத அழிவுகள் ஏற்படத் தொடங்குகின்றன. புவியின் வெப்பநிலை தொடர்ச்சியாக அதிகரித்து வரல், அதன் காரணமாக துருவப் பனிமலைகள் உருகுதல், கடல்மட்டம் உயருதல், பல நாடுகளின் பெரும்பாலான பிரதேசங்கள் கடலில் மூழ்குதல். அத்துடன் புவி வெப்பமடைவதனால் காலநிலையில் ஏற்படும் ஒழுங்கீனங்கள் அதன் மூலம் ஏற்படுகின்ற வறட்சி, வெள்ளம், பாலைவனமாதல் போன்ற பாரிய அச்சுறுத்தல்களை நாம் இன்று எதிர்நோக்கி வருகின்றோம்.

 பச்சை வீட்டு வாயுக்கள்

காபனீரொட்சைட்டு (Co2) மீதேன், நைதரசு ஒட்சைட்டு, அலோ-காபன்கள், தாழ் மண்டல ஓசோன் ஆகியவையாகும். இவை தவிர நீராவியும் பச்சை வீட்டு விளைவில் முக்கிய பங்காற்றும் ஒரு காரணியாகும்.

Co2: Coவாயுவானது பிரதானமாக தாவர சுவாசம், விலங்குகளின் வாழ்வு, ஆகியவற்றில் இருந்தும்  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களையும் மழைக்காடுகளை எரிப்பதன் மூலமாகவும், காடுகளை அழிப்பதன் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகிறது. பச்சை வீட்டு வாயுக்களில் இது முக்கிய வாயுவாகக் காணப்படுவதுடன் அண்மைக்காலமாக உயிர்ச்சுவட்டு எரிபொருட்கள் பாவனையின் தீவிரமான அதிகரிப்பு, காடுகள் அழிக்கப்படல் ஆகியவற்றின் காரணமாக Co2வின் அளவு மிக வேகமாக வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றது. பச்சை வீட்டு வாயுக்களில் நீராவியைப் பேணல் கனவளவு கொண்ட வாயுவில் இரண்டாம் இடம் வகிக்கின்றது.

 

மீதேன் (CH4): வளிமண்டலத்தில் ஊழு2 விட மீதேன் குறைவாக இருந்தபோதிலும் பச்சை வீட்டு வாயுக்களில் அதிக தாக்கமிக்கது. மீதேன் வாயுவானது நெற்செய்கை வயல் நிலங்களின் மூலமாகவும், விலங்குகள், மாடுகளின் மூலமாகவும் தோற்றுவிக்கப்படுகின்றது. மிகச் செறிந்த கைத்தொழில் நிலங்களும் ஈர நிலங்களும் இம்மீதேன் வாயுவை உருவாக்குகின்றன. அண்மைக் காலமாக பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட கைத்தொழில் அபிவிருத்தியின் காரணமாக கால்நடை வளர்ப்பின் மூலமாகவும் இம்மீதேன் வாயுவின் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக பச்சை வீட்டு விளைவில் பங்கேற்கின்ற மீதேனின் அளவு புவி வெப்பமடைவதற்கு பல்வேறு முறையில் காரணமாக அமைகின்றது.

 நைதரசு ஒட்சைட்டு: நைதரசு ஒட்சைட்டுக்கள் மண்ணும் சமுத்திரங்களும் மற்றும் மனித செயற்பாடுகளான விவசாயம், பசளையிடல், நைலோன் தயாரிப்பு, சேதனப்பொருள் தகனம், எரிபொருள் தகனம், வாகனப்புகை ஆகியவற்றில் இருந்து தோற்றுவிக்கப்படுகின்றன. பச்சை வீட்டு வாயுக்களில் முக்கியமான வாயுவாகும். இவ்வகை வாயுக்கள் வாகனங்கள் வெளியேற்றும் புகைகளில் காணப்படுகின்றன. இருந்தபோதிலும் இவை மின்நிலையங்களிலும் மிக செறிவான விவசாய நடவடிக்கைகளிலும் மிக அதிகமாகத் தோற்றுவிக்கப்படுகின்றன. இவ்வகை வாயுக்கள் புவி வெப்பமடைவதில் 6மூ அளவு பங்களிப்புச் செய்கின்றது.

தாழ் ஓசோன் வாயு: தாழ்மண்டல ஓசோனும் முக்கியமானது. இவ்வகை வாயு வாகனங்களினால் வெளியேற்றப்படும் புகைகளிலுள்ள ஆவிப்பறப்புள்ள சேர்வைகள் சூரிய ஒளியுள்ள போது நைதரசு ஒட்சைட்டுடன் சேரும்போது உருவாக்கப்படுகின்றன. இந்த தாழ்நிலை ஓசோன் மரங்களுக்கும் மிருகங்களுக்கும் மிகவும் தீமையை உண்டுபண்ணுவதுடன் புவி வெப்பமடைவதிலும் பிரதான பங்காற்றுகின்றது.

அலோ-காபன்கள் (Halocarbons): மனித செயற்பாடுகளால் இவை உருவாக்கப்படுகின்றன. புரோமின், குளோரின், புளோரின் போன்ற வாயுக்களைக் கொண்ட அலசன் குடும்ப (halogen family) வாயுக்கள் மற்றும் காபன்களை இவை கொண்டுள்ளன. இவையனைத்தும் வலிமைமிக்க பச்சை வீட்டு வாயுக்களாகும். அனேகமான கைத்தொழில்சாலைகள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து CFC எனும் குளோரோ புளோரோ காபன் விடுவிக்கப்படுகின்றது. பச்சை வீட்டு வாயுக்களில் குளோரோ புளோரோ காபன்களும் முக்கிய பங்காற்றும் ஒன்றாக காணப்படுகின்றது. இவை வாசனைக் கொள்கலன்களிலும், குளிரூட்டிகளிலும் உபயோகிக்கப்படுகின்றன. இது இரு அபாயகரமான பச்சை வீட்டு வாயுவாகும். CFC மூலக்கூறானது ஒரு காபனீரொட்சைட்டு மூலக்கூறினை விட 100 மடங்கு வெப்பத்தினை அதிகமாக உறிஞ்சி வைத்துக் கொள்ளக்கூடிய தன்மை வாய்ந்ததாகும்.

நீராவி (Water Vapor): நீராவியும் பச்சை வீட்டு விளைவை உண்டாக்கும் ஒன்றாகும். இது இயற்கையாகவும் மனிதனாலும், சுவாசம், ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பு மூலம் உருவாகின்றது. ஆவியாக்கத்தின் மூலம் அதிக நீராவி வெளியிடப்படும்போது புவிமேற்பரப்பு வெப்பம் அதிகரிக்கிறது.

கடந்த வருடங்களில் எந்தளவு பச்சை வீட்ட வாயுக்கள் அதிகரித்துள்ளன என நோக்குவது முக்கியமாகின்றது. கடந்த 200 வருடங்களில் மீதேனின் செறிவு இரட்டிப்பாகியுள்ளது. ஊழு2 வின் செறிவானது கடந்த 160000 வருடங்களிலும் பார்க்க இன்று 20மூ க்கும் மேல் காணப்படுகிறது. சில அலோ காபன்கள் வளிமண்டலத்தில் கடந்த 100 வருடத்திற்குள்ளாக அதிகரித்துச் செல்லுவதாக உள்ளது.

பூகோளம் வெப்பமாதல்

கைத்தொழில் புரட்சிக்குப் பின் ஏற்பட்ட நிகழ்வுகளினால் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரித்தே  வந்துள்ளன. புவி வெப்பமடைவது பச்சை வீட்டு விளைவின் நேரடித் தாக்கமாகும் அதிகரித்த பச்சை வீட்டு விளைவின் காரணமாக புவியின் முழு வெப்பமும் அதிகரிக்கின்றது. இச்செயற்பாடு புவி வெப்பமடைதல் அல்லது பூகோளம் வெப்பமாதல் எனப்படும். இது காலநிலை மாற்றத்தைக் குறிப்பதன்று. புவி வெப்பமடைவதால் ஏற்படும் பல பாதிப்புகளில் காலநிலை மாற்றமும் ஒன்றாகும்.

ஏற்கனவே கூறப்பட்டது போன்று புவி வெப்பமடைதலுக்கு பச்சை வீட்டு வாயுக்களே காரணமாகின்றன. இப்பச்சை வீட்டு வாயுக்கள் இயற்கைச் செயற்பாடுகளின் மூலமாகவும் மனித நடவடிக்கைகள் மூலமாகவும் வளிமண்டலத்தில் அதிகரித்து வருகின்றன.

காபனீரொட்சைட்டு, மீதேன், அலோ காபன்கள், கந்தகவீரொட்சைட்டு, காபனோரொட்சைட்டு, நைதரசவீரொட்சைட்டு, தாழ்வளி ஓசோன் ஆகியன புவி வெப்பமடைதலுக்கு பங்களிக்கின்ற மூலகங்களாக விளங்குகின்றன.

 புவி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள்

  • புவியின் சராசரி வருடாந்த வெப்பநிலை 3 பாகை பரனைட்டில் இலிருந்து பாகை பரனைட் வரை உயர்ந்து வருகின்றது. இந்த வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உருகுகின்ற பனிக்கட்டிகள் அபாயகரமான தாக்கத்தை விவசாயத்திலும் இறுதியாக கடல் மட்டத்திலும் உருவாக்க முடியும். வெப்பநிலையின் உயர்ச்சி துருவப் பனிக்கட்டிகளை உருகச் செய்வதனால் அதிகளவு நீரை வெளியேற்றி சமுத்திர மட்டம் உயர்வதற்கு காரணமாக அமையும். அண்மையில் கங்கை நதியின் ஆரம்ப இடமான பனிமலைப்பகுதியில் பனிக்கட்டிகள் விரைவாக உருகி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  •  நிலப்பகுதியிலிருந்து அதிகளவு நீராவியாதல் ஏற்படும். இதன் காரணமாக நீரியல் வட்டம், கடல் சூழற் தொகுதியின் உப்புத்தன்மை, நன்னீர் தொகுதி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும். அத்துடன் மீன்களின் முட்டை உற்பத்தியும் பாதிக்கப்படும்.
  •  சமுத்திர நீரோட்டங்களில் மாற்றங்கள் ஏற்படும்.
  •  வாழும் அங்கியின் நொதியத் தொழிற்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இதனால் சுவாசமும் ஒளித்தொகுப்பும் பாதிக்கப்படும்.
  •  பாலைவனமாதல் தீவிரமடையும்.

இவைபோன்ற பாதிப்புக்கள் பூகோள வெப்பமடைவதால் ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.

இவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பான பேரழிவுகள் தற்பொழுது உலகில் அரங்கேறி வருகின்றன. இனியும் தாமதிக்காது இதனை தடுத்து நிறுத்துவதற்கான செயற்பாடுகளில் நாமும் அரசாங்கமும் ஈடுபட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. இதற்காக தனிமனிதன் என்ற வகையிலும் நாம் இப்புவியில் வாழுகின்ற பிரஜை என்ற வகையிலும் சூழலைப் பாதுகாக்க வேண்டிய செயற்பாடுகளை ஆற்ற வேண்டியுள்ளோம். முடியுமான அளவு தாவரங்களை அழிக்காதிருத்தல், மரம் நடுகையில் ஈடுபடுதல், பச்சை வீட்டு வாயுக்களை வெளியிடும் பொருட்களை உபயோகிக்காது இருத்தல் சிறிய சிறிய தேவைகளுக்கு மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதைத் தவிர்த்தல், துவிச்சக்கரவண்டியின் பாவனைகளை அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகளில் எம்மை ஈடுபடுத்துவது புண்பட்டுப் போயிருக்கும். எம் பூமித்தாய்க்கு நாம் மேற்கொள்கின்ற ஆறுதலான விடயங்கள் எனலாம்.

அரசாங்கம் என்ற வகையில் பச்சை வீட்டு விளைவுகளை அதிகரிக்கும் வாயுக்களை வெளியிடும் பொருட்கள் தொழில் நடவடிக்கைகளை தடுத்தல், காடழிப்பினைத் தடுத்தல், மீள்காடாக்கம் செய்தல், மக்களை விழிப்புணர்வுக்கு உள்ளாக்குதல், சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து நடத்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

 அமில மழை 

அண்மைக்காலமாக, அமிலமழையின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. கைத்தொழில் புரட்சியின் பின் புவியில் ஏற்பட்ட சூழல் அனர்த்தங்களில் அமில மழையும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கைத்தொழில் சாலைகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றதும், வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படுகின்றதுமான கந்தகவீரொட்சைட்டு, நைதரசன் ஓரொட்சைட்டு, நைதரசனீரொட்சைட்டு ஆகியன வளிமண்டலத்திலும், வளிமண்டல நீர் நிலைகளிலும் கலக்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக தோற்றுவிக்கப்படும் படிவு வீழ்ச்சி அல்லது அமிலப்படிவுகளுடன் பெய்வதாக காணப்படும். இதனையே அமில மழை என்கிறோம். இத்தகைய அமில மழை உலகில் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது பொழிவதை நாம் கேட்டும், பார்த்தும், அறிந்தும் வருகின்றோம். உதாரணமாக 1979 இல் கனடாவில் டொரான்டோ, அமெரிக்காவின் லொஸ்ஏன்ஜல்ஸ் (1981), மற்றும் நோர்வே போன்ற நாடுகளில் இத்தகைய அமில மழை பொழிந்துள்ளது.

 அமில மழைக்குக் காரணமாகின்ற கந்தகவீரொட்சைட்டு,

  • கந்தகம் அதிகமாகவுள்ள எரிபொருளை பயன்படுத்தும் பாரிய கைத்தொழிற்சாலைகளிலுமிருந்தும்,
  •  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  எரிமலைக் கற்குகைகள் மூலமாகவும், தோற்றுவிக்கப்படுகின்றன.
  •  அமில மழைக்குக் காரணமாகின்ற நைதரசன் ஓரொட்சைட்டு, நைதரசன் ஈரொட்சைட்டு என்பன,
  •  நைதரசன் அதிகமாகவுள்ள உயிர்ச்சுவட்டு எரிபொருட்களை எரிப்பதன் மூலமாகவும்,
  •  வாகனங்கள் வெளியேற்றும் புகைகளின் மூலமாகவும்,
  •  கைத்தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் அமிலத் துளிகள் மூலமாகவும்,
  •   எரிமலைக் கற்குகைகள் மற்றும் மின்னலின் மூலமாகவும்,

                               தோற்றுவிக்கப்படுகின்றன.

 

  • அமில மழையின் காரணமாக மண்ணில் அமிலத் தன்மை அதிகரிக்கும். இதன் மூலமாக மண்ணில் காணப்படும் உலோக மூலகங்களின் அளவு அதிகரிக்கும்.

உ+ம்: அமில மழையினால் மண்ணில் அலுமினியத்தின் அளவு அதிகரிக்கும். அவை தாவரங்களுக்கு நச்சுத்தன்மையாக மாறும்.

  • அமில மழையின் காரணமாக மண்ணில் உள்ள போசணைக் கூறுகள் அல்லது வளரும் தாவரங்களுக்கு கிடைக்காமல் போகும். அத்துடன் மண்ணிலுள்ள நுண்ணங்கிகளும் ஏனைய அங்கிகளும் கொல்லப்படுவதால் அதன் மூலமாக ஆற்றப்படுகின்ற உக்கல் செயற்பாடுகள் தடுக்கப்படும்.
  •  பசுமையான மரங்களின் இலைகளுக்கு பாதிப்பு ஏற்படும்.
  •  நீர்நிலைகள் அமிலத்தன்மையுடையதாக மாறுவதால் உணவுச் சங்கிலிகள் மற்றும் சூழற்தொகுதியின் தொழிற்சாலைகள் பாதிப்படையும்.
  •  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சின்னங்கள் மாசுபடுவதற்கும் அழிவுறுவதற்கும் காரணமாகின்றது.

உ+ம்: தாஜ்மகால்

மேற்கண்ட எடுத்துக்காட்டுக்கள் அமில மழையினால் புவியில் தோற்றுவிக்கப்படும் சில பிரச்சினைகளை மட்டுமே விளக்கியுள்ளன. இத்தகைய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக நாம் பல்வேறு மாற்று வழிகளைத் தேட வேண்டியுள்ளது.

 ஓசோன் படலத்தின் பாதிப்பு

ஓசோன், ஒட்சிசனினால் ஆக்கப்படும் ஒரு மூலக்கூறாகும். மூன்று ஒட்சிசன் மூலக்கூறுகளால் ஓசோன் (O3) உருவாக்கப்படுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் படலத்தின் செயற்பாடு மிக முக்கியமானதாகவுள்ளது. புவியின் வளிமண்டலப் பகுதியில் படைமண்டலத்தில் கீழ்ப்பகுதிகளில் இந்த ஓசோன் படலத்தை நாம் காணலாம். ஓசோன் நிறமற்ற வாயுவாகும். தாழ்மண்டல ஓசோன் பச்சை வீட்டு வாயுவாக விளங்க படைமண்ட ஓசோனே புவியைப் பாதுகாக்கும் கவசமாகத் தொழிற்படுகிறது.

சூரியனிலிருந்து வெளிவரும் சூரியக் கதிர்வீச்சானது மிகச் செறிவான கழிஊதாக் கதிர்களை கொண்டுள்ளது. இக்கதிர்கள் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் பயங்கரமான தீங்குகளை விளைவிக்கக்கூடியது. இத்தகைய கதிர்களை வளிமண்டலத்திலுள்ள ஓசோன் படலமானது தடுத்து நிறுத்துகின்றது.

இத்தகைய பெரும் பங்களிப்பினை ஆற்றுகின்ற ஓசோன் படலமானது அண்மைக் காலமாக அழித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனையே ஓசோன் படை ஓட்டை என்று கூறுகின்றனர்.

நாம் பயன்படுத்துகின்ற மிகை குளிரூட்டிகள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றில் இருந்தும் ஊகுஊ வாயுக்களும் நெற்செய்கை நிலங்களிலிருந்து சதுர்ப்பு நிலங்களிலிருந்தும் உற்பத்தியாக்கப்படுகின்ற மீதேன் வாயு, வாகனங்கள், சக்தி நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேற்றப்படுகின்ற நைதரசன் ஒட்சைட்டு ஆகியன ஓசோன் மூலக்கூறுகளைத் தனித்தனி ஒட்சிசன் மூலக்கூறுகளாக பிரிகையடையச் செய்கின்றன. இதனால் ஓசோன் படலம் இல்லாமலாக்கப்படுகின்றது. இதன் மூலமாக ஓசோன் படலத்தில் துவாரங்கள் ஏற்பட்டு அதன் மூலம் புவியிலுள்ள உயிர்க்கூறுகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சூரிய கதிர்கள் நேரடியாக புவியினை வந்தடைய வழி ஏற்படுகின்றது. இதனால் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு கட்காசம், தோற் புற்றுநோய் என்பன ஏற்படுகின்றன.

சுற்றாடற் புவியியல்

 சுற்றாடற் புவியியல்-சுற்றாடலின் அடிப்படை கூறுகள்    

                                                                                     ஆக்கம்: எப்.எம்.நவாஸ்தீன் 

 உள்ளடக்கம்

  1.  சுற்றாடற் புவியியல் – அறிமுகம்
  2. சூழல் – வரைவிலக்கணம்
  3. சூழலின் பிரதான வகைகள்
  4. சூழல்க் கூறுகளின் இடைத்தாக்கம்
  5.  சூழல்-மனிதத் தொடர்புகள்

 சுற்றாடற் புவியியல் - ஓர் அறிமுகம்

புவியியல் என்பது, புவியினைப் பற்றிய விஞ்ஞான ரீதியான கற்கைநெறி எனக் கூறுவர். பொதுவாக மனிதன் புவிச்சூழலோடு கொள்ளும் இடைத் தொடர்புகள் குறித்தே புவியியலில் ஆராயப்படுகின்றன. கிரேக்க நாகரீக காலத்தில் எழுச்சி பெற்ற அறிவியல் துறைகளில் ஒன்றாகப் புவியியலும் விளங்குகின்றது. புவியியல் என்ற பதத்தைக் குறிக்கின்ற GEOGRAPHY என்ற ஆங்கிலச் சொல் கிரேக்கச் சொற்களான “geo”> “graphe” ”graphikos” என்பவற்றில் இருந்து பிறந்ததாகும். geo என்பது புவியினையும் “graphe”/”graphikos”  என்பது விபரித்தல் என்றும் பொருள்படுகின்றது. 

எனவே புவியியலை புவியினைப் பற்றி விபரிக்கும் இயல் என இலகுவாக வரையறுக்கலாம் (Description of the earth).  புவியியலானது பல்வேறுபட்ட கால கட்டங்களினூடாக பல்வேறு புவியியலாளர்களினதும் அளப்பரிய பங்களிப்புகளினால் வளர்ச்சிபெற்று வருகின்றது. அதன்படி, ஒவ்வொரு காலகட்டத்துக்குமேற்ப பல்வேறு கிளைத் துறைகளும் புவியியலில் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்று வருகின்றன. 

உ+ம்: பௌதீகப் புவியியல் மானிடப் புவியியல், குடித்தொகைப் புவியியல், மருத்துவப் புவியியல், நகரப் புவியியல், விவசாயப் புவியியல்...

அண்மைக் காலங்களில் உலகில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் மனித இனத்தை அழிவுப்பாதையில் இட்டுச் செல்லுகின்றன. விரைவாக அதிகரித்துவரும் சனத்தொகை, தொழிநுட்பத்தின் அபரிமித வளர்ச்சி, கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கம் போன்ற காரணிகள் இன்று உலக சுற்றுச் சூழல் நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ளமை நாம் அறிந்ததே! 

உலக சனத்தொகையின் விரைவான அதிகரிப்பு,  மனித சமனற்ற பரம்பல், நகரமயமாக்கம், கைத்தொழிலாக்கம், சுற்றுச்சூழல் மாசடைதல், காடழிப்பு, ஓசோன் படைத்தேய்வு, புவி வெப்பமாதல், மண்ணரிப்பு, மண்சரிவு என்று உலக சுற்றுச் சூழல் நெருக்கடிகளை பட்டியல்படுத்திக்கொண்டே போகலாம். இத்தகைய நெருக்கடிகளின் விளைவுகளை உணர்ந்து கொண்ட பௌதீகவியல், தாவரவியல், விலங்கியல் போன்ற இயற்கை விஞ்ஞானத் துறைகள் சூழல், சூழல் நெருக்கடிகள், அதன் முகாமைத்துவம் குறித்து அதிய கவனம் செலுத்தி வருகின்றன. ஆயினும் சூழல் பற்றி அதிக உரிமையுடைய புவியியலில் இத்தகைய மாற்றம் உடனடியாக வரவில்லையென்றே கூறலாம். 

சூழல் பற்றிய கற்கைகள் புவியியலில் ஓர் இடைப்பட்ட விடயமாகவே (Inter Disciplinarily) நோக்கப்பட்டது. எவ்வாறாயினும் சூழல் பற்றி புவியியலில் தனியானதொரு துறையாக எடுத்து நோக்குவது இன்றைய தேவையாக உள்ளது. இதன்மூலம், சூழல் பற்றி அதிக கற்கைகள் ஆய்வுகளை புவியியலில் முன்னெடுத்துச் செல்லவும், சூழல் சார்ந்த தேர்ச்சி பெற்ற புவியியலாளர்களை உருவாக்கி சூழல் நெருக்கடிகளுக்கான தீர்வுகளுக்கான திட்டமிடலில் புவியியலாளர்களின் பங்களிப்பினை உறுதி செய்வதற்கு முடியுமாகும். இதன் காரணமாக புவியியலில் சுற்றாடற் என்ற துறை தனித்தொரு துறையாக தோற்றம் பெற்றுள்ளது. இக்கற்கையில், மனித சூழலில் பிரதான பங்கு வகிக்கின்ற தரைத்தோற்றம் நீர்க்கோளம், வளிக்கோளம், உயிர்க்கோளம் மற்றும் பண்பாட்டு சூழல் என்பன முக்கிய விடயங்களாக உள்ளடங்குகின்றன.

 

                                    உரு 1: சுற்றாடல் புவியியலின் பாட உள்ளடக்கம்

சூழல் – வரைவிலக்கணப்படுத்தல்

 சூழல் என்ற சொல் எம்மிடையே பலவாறாக அழைக்கப்படுவதை செவியுறுகிறோம். 'இயற்கை' 'சுற்றுசூழல்' 'உலகம்' 'சுற்றாடல்' 'சூழல்' எனச் சாதாரண வழக்கில் நாம் சூழலை அழைக்கின்றோம். இவை ஒரே கருத்துடைய சொற்களாகவே உள்ளன. எனவே சூழல் என்ற எண்ணக்கரு மேற்குலகினாலோ அல்லது புதிதாகவோ எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டதொன்றன்று. 

இதன்படி சூழல் என்றால் என்ன என்பதை இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாயினும் அதனை முறையாக வரையறை செய்வது மிகக் கடினமானதாக உள்ளது. எனினும் முறையான கற்கையொன்றில் சூழல் என்ற எண்ணக்கருவினை தெளிவாகவும், சரியாகவும் விளங்கிக் கொள்வது அவசியமாக உள்ளது. இவ்வாறு விளங்கிக் கொள்வதன் மூலம் நாம் வாழும் புவியினைப் பற்றி முறையாகவும் அறிவுபூர்வமாகவும் அறிந்து கொண்டு உலகில் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடியதாயிருக்கும். எனவே சூழல் குறித்து வெளிவந்துள்ள சில வரைவிலக்கணங்களை நோக்குவோம்.

  • எம்மைச் சூழ்ந்து காணப்படும் அனைத்து பௌதீக பண்பாட்டு அம்சங்களுக்கு வழங்கப்பட்ட மறு பெயரே சூழல் எனப்படுகின்றது.
  • உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் ஒன்றினை அல்லது பலவற்றினைச் சூழ்ந்திருப்பது சூழல் எனப்படும். (தம்பையாபிள்ளை 1976) 
  •  'உயிரினத்தைச் சூழ உள்ள பௌதீக, இரசாயன மற்றும் உயிர்க் கூறுகளின் நிலைமையே' சூழல் ஆகும். (மைக்கல் எல்ப் (1993), Dictionary of Environment, #oy; mfuhjp)
  • இவ் வரைவிலக்கணத்தில், உயிரினங்களின் இயக்கத்திற்குப் பௌதீக, இரசாயன மற்றும் உயிர்க்கூறுகள் என்பன அடிப்படைத் தேவையாக உள்ளன எனத் தெளிவாகின்றது.
  • உயிரினங்களின் இயக்கத்துக்கு செல்வாக்குச் செலுத்தும் வெளிப்புற நிலமைகளின் தொகுப்பே சூழலாகும். (கெரன் ஜோன்ஸ் (1990) Dictionary of Environment Scienceஇவ்வரைவிலக்கணத்தில் வெளிப்புற நிலைமைகள் என கருதப்படுபவை யாதெனில் உயிரற்ற (பௌதீக, இரசாயன) கூறுகளையும் உயிர்க்கூறுகளையுமேயாகும்.

சூழலின் பிரதான பிரிவுகள்

சூழல் என்றால் என்ன என்பது பற்றி மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள வரைவிலக்கணங்களிலிருந்து நாம் அறிந்து கொண்டோம். இனி சூழலின் பிரதான பிரிவுகள் பற்றி எடுத்துக்காட்டப்பட்டுள்ள வரைவிலக்கணங்களிலிருந்து நாம் அறிந்து கொண்டோம். இனி சூழலின் பிரதான பிரிவுகள் பற்றி எடுத்து நோக்குவோம். ஆரம்ப காலங்களிலிருந்தே சூழலை இயற்கைச் சூழல்/ பௌதீகச் சூழல் என்றும் பண்பாட்டுச் சூழல் என்றும் பாகுபடுத்தி நோக்கி வந்துள்ளனர்.

மனிதனால் ஆக்கப்படாத சூழலை பௌதீகச் சூழல் என்பர். குறித்த ஒரு பிரதேசத்தின் இயற்கையான மூலகங்கள் பௌதீகச் சூழலை உருவாக்குகின்றன.

அவையாவன:

1.         தரைத்தோற்றமும் வடிகாலும் (Relief and Drainage)

2.         வானிலையும் காலநிலையும் (Whether and Climate)

3.         பாறைகளும் மண்வகையும் கனியங்களும் (Rock, soil and Minerals)

4.         இயற்கைத் தாவரங்களும் வனவலங்குகளும் (Natural Vegetation and wild Animals)

 

இம் மூலகங்கள் புவிமேற்பரப்பில் இடத்துக்கிடம் வேறுபடுகின்றது. அத்துடன் இவை ஒவ்வொன்றும் இடைத்தாக்கத்துக்கும் உட்படுகின்றன.  பௌதீகச் சூழல் மூலகங்கள் ஒன்றோடொன்று தாக்கம் புரிவதனால் குறுங்காலத்திலும், நீண்டகாலத்திலும் புவிமேற்பரப்பில் மேலும் மாற்றத்துக்குட்படுகின்றன. எனினும் இவ்வேறுபாட்டை ஆக்குவதில் இம் மூலகங்களில் ஒரேயளவு ஆதிக்கம் காணப்படுவதில்லை. ஒரு மூலகம் மற்றையதிலும் பார்க்க ஆதிக்கம் கூடியதாக இருக்கலாம்.

 

பௌதீகச் சூழல் மூலகங்களின் இடைத்தாக்கங்கள்

பின்வரும் தாய உருவில் பௌதீகச் சூழல் மூலகங்கள் எங்ஙனம் இடைத்தாக்கம் புரிகின்றது எனக் காட்டப்படுகிறது 

உரு 2: பௌதீகச் சூழல் மூலகங்களின் இடைத்தாக்கம்

மூலம்: தம்பையாபிள்ளை (1976) 

(அ)      தரைத்தோற்றமும் வடிகாலும்

(ஆ)      வானிலையும் காலநிலையும்

(இ)      பாறைகள் கனியங்கள் மண்வகைகள்

(ஈ)       இயற்கைத் தாவரங்களும் வனவிலங்குகளும்

 

இடைத்தாக்கம் புரியும் முறைகள்

1.         தரைத்தோற்றம், வடிகால், வானிலை, காலநிலை

2.         தரைத்தோற்றம், வடிகால், பாறைகள், மண்வகை

3.         தரைத்தோற்றம், வடிகால், இயற்கைத் தாவரம்

4.         வானிலை, காலநிலை, மண்வகை

5.         வானிலை, காலநிலை, இயற்கைத் தாவரம்

6.         மண், இயற்கைத் தாவரம்

 

பௌதீகச் சூழலின் அமைவிடம்

மேலும் பௌதீகச் சூழல் என நோக்கும்போது ஓரிடத்தின் பௌதீகச் சூழலின் அமைவு பற்றியும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். ஓரிடத்தின் பௌதீகச் சூழல் அமைவினை

 

(1)        தனி அமைவு

(2)        சார்பு அமைவு எனப் பாகுபடுத்தி நோக்குவர்.

 

தனியமைவு எனின் பூகோள கற்பனைக் கோடுகளான அகலக்கோடு, நெடுங்கோடு அடிப்படையில் ஓரிடத்தினைக் குறிப்பிடுதலாகும். சார்பு அமைவு எனின் ஓரிடத்தினை பிற இடங்களுடன் அல்லது தோற்றப்பாடுகளின் அடிப்படையில் நோக்கப்படுதலாகும். (தூரம், திசை கொண்டு குறிப்பிடல்)

 

சூழலின் மற்றைய கூறான பண்பாட்டுச் சூழல் - மனிதனாலாக்கப்பட்ட சூழலையே குறித்து நிற்கின்றது. புவிமேற்பரப்பின் சிக்கலான மனித முயற்சிகள் பண்பாட்டுச் சூழல் எனப்படுகின்றது. உணவுஉடைவீடுபோக்குவரத்தும் தொடர்பாடலும்குடியிருப்புக்கள்பொருளாதார நடவடிக்கைகள் என்பன பண்பாட்டுச் சூழலை ஆக்கும் மூலக்கூறுகளாகும்.

 

சூழல் - மனிதத் தொடர்புகள்

 புவியியலாளர்களது பார்வையில் சூழல் என்பது உலகின் மேற்பரப்பில் எந்த ஓர் இடத்திலும் வாழுகின்ற மனிதன் ஒருவனைச் சுற்றிக் காணப்படுகின்ற அம்சங்கள்ஃ தோற்றப்பாடுகளின் மொத்தம் என்பதாகும். மனிதனுக்கும் சூழலுக்குமிடையிலான தொடர்புபற்றி புவியியலாளர்களிடையே எப்போதும் ஒரு மயக்கம் இருந்து வந்துள்ளது எனலாம். புவியில் மனிதன் வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான உறவு மிக நெருக்கமாகக் காணப்பட்டு வருகின்றது. இவ்வுறவின் தன்மைகள் கால மாற்றங்கள், அதற்கேற்ற வகையில் மனிதத் தேவைகளின் மாற்றங்கள் மற்றும் மனித அறிவின் வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் மாறுதல்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.

 ஆரம்ப காலங்களில் மக்கள் தாம் வாழ்ந்த இடத்தின் நிலமைகளுடன் குறிப்பாக காலநிலை, தரைத்தோற்றம், இயற்கைத் தாவரம், மண் போன்ற பௌதீகச் சூழலுடன் இணைந்த வகையில் வாழ்ந்து வரக் காணப்பட்டனர். காலப்போக்கில் இத்தன்மை படிப்படியாக மாற்றம் அடைந்தே வந்துள்ளது.

 இந்த அடிப்படையில் மனித சூழத் தொடர்புகளின் இரு மாறுபட்ட தொடர்புகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

(அ) மனிதனில் சூழலின் தாக்கம்

(ஆ) சூழலில் மனிதனால் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள்

 இங்கு 'சூழல் மனித நடவடிக்கைகளில் ஏற்படுத்தும் தாக்கம்', 'மனிதன் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம்' என்பவற்றை நோக்கும்போது எதற்கு எது காரணமாகின்றது எனக் கூறுவது கடினமாகும். எனினும் மனித-சூழல் உறவு பற்றி ஆராய்ந்த புவியியலாளர்களினால் பல்வேறுபட்ட கோட்பாடுகள் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள்

 (1)        சூழல் ஆதிக்க வாதம்/ நியதிவாதம்

(2)        மானிட ஆதிக்க வாதம்/தேர்வு முதன்மை வாதம்

(3)        நின்றுபோ நியதிவாதம்/நிறுத்தியும் செல்லவும் தீர்மானிக்கும் புவியியல் தத்துவம் என்பன குறிப்பிடத்தக்கன.

 சூழலாதிக்கவாதம் (Possibilism)

சூழல் மனிதன் மீது முற்றுமுழுதாக ஆதிக்கம் செலுத்துகின்ற நிலமையினை சூழலாதிக்கவாதம் என்போம். இக்கோட்பாட்டை முன்வைத்தவர்களை அல்லது ஆதரிப்போரை சூழலாதிக்க வாதிகள் என்கிறோம். சூழலாதிக்கவாதக் கருத்துக்கள் 19ஆம் நூற்றாண்டில் ஜேர்மனிய புவியியலாளர்களாலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்டன. சார்ள்ஸ் டார்வினின் 'உயிரினங்களின் மூலம்' என்ற நூல் 1859இல் வெளியிடப்பட்டது. வரையறுக்கப்பட்ட வளங்களுக்காக உயிரினங்களிடையே கடுமையான போட்டி நிலவியது என்றும் அதில் சூழலுக்கேற்ப தன்னை இயைவுபடுத்திக் கொண்ட சில உயிரினங்களே பிழைத்துக் கொண்டன என்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்நூல் விளங்கியது. இத்தகைய சிந்தனைகளால் கவரப்பட்ட ஜேர்மனியப் புவியியலாளர்கள் சூழலாதிக்கவாதக் கருத்துக்களை முன்வைக்கலாயினர்.



ஜேர்மனியப் புவியியலாளரான பிரட்ரிக் றட்சல் (1844-1904) டார்வினின் கொள்கையினால் கவரப்பட்டவராக மனிதச் செயற்பாடுகள் யாவும் பெரும்பாலும் பௌதீகச் சூழலால் தீர்மானிக்கப்படுகின்றது என்ற அடிப்படையில் தனது கருத்தை வெளியிட்டார். இக் கருத்தே சூழலாதிக்க வாதம் எனப்படுகின்றது. 

                                                                      Friedrich Ratzel
Source: Britinaica 

இவரினுடைய கருத்தைப் பின்பற்றி எலென் சாம்பில் என்பவரும் சூழல் ஆதிக்கவாதக் கருத்துக்களுக்குச் சார்பாகத் தனது கருத்தை வெளியிட்டார். எலென் சாம்பிலின் நூலான புவியில் சூழலின் செல்வாக்கு (1911) என்பதில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார். சூழல்க் காரணிகள் மனிதனின் செயற்பாடுகள் மீது நேரடியான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என உறுதியாக நம்பினார். அவர் தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார். மனிதன் பூமியினால் பிறப்பிக்கப்பட்டவனாகும். புவி மனிதனின் தாயாகவும் அவனுக்கு உணவளித்து அவனைப் பல செயற்பாடுகளுக்கு ஈடுபடச் செய்கிறது. பிரச்சினைகளை எதிர்நோக்க வைப்பதுடன் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் இரகசியமாக அடையாளம் காட்டி நிற்கின்றது. நவீன புவியியலாளர்களான னுயனடல Dadly Stamp> OHK Spele போன்றவர்களும் சூழலிற்கு முக்கியத்துவமளித்து மனித நடவடிக்கைகளை ஆராய்ந்தனர்.

 மானிட ஆதிக்க வாதம்

Paul Vidal de La Blache
Source:  Wikipedia



சூழல் ஆதிக்கவாதக் கருத்துக்களுக்கு முரண்பட்ட கருத்து இதுவாகும். இக்கொள்கையை முதன் முறையாக விடால் டி லாப்லாஜ் என்ற பிரான்சியப் புவியியலாளர் முன்வைத்தார். இக்கருத்து ஜீம்புரூன்ஜஸ் போமான், கார்ளஸ் ஷோவர் போன்ற அறிஞர்களினால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இக்கருத்து 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியிலிருந்து 1950 வரைகளில் பிரசித்தி பெற்றுக் காணப்பட்டது. இக்கருத்துக்கள் விடால் டி லாப்லாஜ்ஜின் 'மானிடப் புவியியல் தத்துவங்கள் என்ற நூலில் வெளியிடப்பட்டது. இதன்படி சூழலுக்குக் குறிப்பிட்ட அளவு சாத்தியப்பாடுகளே உண்டென்று அவற்றைப் பயன்படுத்துவது முற்றிலும் மனிதனின் தெரிவிலேயே தங்கியுள்ளது என்ற எண்ணக்கருவினை இவ்வாதம் தொனித்து நிற்கின்றது. ஸபோமன் என்பவர் மானிட ஆதிக்கவாதம் என்பது மனிதன் எல்லாச் சூழல் செல்வாக்கிலிருந்து விடுதலை பெற்றவன் என்று உரிமை கோரவில்லை என்று விபரிக்கின்றார்.

 நின்று – போ – நியதிவாதம்

 பேராசிரியர் கிரிபத் டெய்லர் என்பவரது கருத்து இதுவாகும். இவரது கருத்தின்படி மனிதன் இயற்கையின் நிலையான வரையறைக்குள் தன்னை மாற்றியமைத்துக் கொள்வதற்காக மனிதன் ஒரு படி முன்னேறினான் மனிதன் என்பவன் சுதந்திரமான காரணியல்ல, மனிதனால் ஒரு நாட்டின் அபிவிருத்தியினைத் துரிதப்படுத்தவோ தாமதப்படுத்தவோ முடியும். ஆனால் அவனால் அதனைத் தடுத்து நிறுத்த முடியாது. இக்கருத்தினை மானிட ஆதிக்கவாதத்தின் பிற்பட்ட காலங்களில் வளர்ச்சி பெற்ற கருத்தாகக் கருதுவர்.

மனித - சூழல் தொடர்புகள் குறித்து மேலும் நோக்குமிடத்து 'சன்டெல்' என்ற புவியியலாளர் மனித நடவடிக்கைகளுக்கும் சூழலுக்குமிடையிலான தொடர்பானது மூன்று முகங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது எனக் கருதினார். இதனை ஒரு முக்கோணத்தில் அமைத்து தனது எண்ணக்கருவினை வெளிப்படுத்தயிருந்தார்.

 மனித நடவடிக்கைகளுக்கும் சூழலுக்குமிடையிலான தொடர்புகள்


மனிதன் சூழலின் செல்வாக்குக்குட்பட்டவனாக, 'கீழ்ப்படிந்து' வாழ்ந்த நிலையும், பின், மனிதத் தேவைகளும் அறிவியல்களின் வளர்ச்சியும் சூழலின் மீது மனிதன் செல்வாக்குச் செலுத்தியமை 'எதிராகுதல்' என்பதிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. மனிதன் சூழலின் மீது ஆதிக்கம் மேற்கொள்ளும்போது சூழல் நெருக்கடிகள் தோன்றுவதனால் மனிதன் சூழலுடன் ஒத்துழைத்து வாழ வேண்டி ஏற்படும் நிலைமையுமே இக்கருதுகோளில் எடுத்துக்காட்டப்படுகின்றது. இதன்படி மனிதன், இயற்கை, அபிவிருத்தி ஆகிய மூன்று அம்சங்களிடையே தெளிவான உறவுகளைக் காணமுடிகின்றது. இதனையே சோலி என்ற ஆங்கிலப் புவியியலாளர் 'ஈடித்தின் தோட்டத்திலும் கூட ஒரு முயற்சியாளன் இருந்தான் எனக் கூறியது இங்கு மனங் கொள்ளத்தக்கது.

உசாத்துணைகள்:

தம்பையாபிள்ளை (1976) புவியியல்முதலாம் பாகம் பக்கம் 143)

·      மைக்கல் எல்ப் (1993), Dictionary of Environment

கெரன் ஜோன்ஸ் (1990) Dictionary of Environment Science


விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...