ஆய்வு ஒழுக்கவியல்

 



ஆய்வு ஒழுக்கவியல் 


                               கலாநிதி.எப்.எம்.நவாஸ்தீன் 
பேராசிரியர் 
கல்விப் பீடம் 
                இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 

அறிமுகம் 

இன்றைய காலகட்டத்தில் ஆய்வில் ஈடுபாடு காட்டும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர். கால முக்கியத்துவம் பெறும் பிரச்சினையொன்றுக்கு பொருத்தமான தீர்வுகளை கண்டறியும் பொருட்டு பொருத்தமான, ஏற்றுகொள்ளப்பட்ட முறைகளில் தரவுகள், தகவல்களை திரட்டி, பகுப்பாய்வுக்குட்படுத்துவதன் ஊடாக பிரச்சினைக்கான தீர்வுகள், அதற்க்கான வழிமுறைகளை கண்டறியும் ஒரு செயலொழுங்கினை ஆய்வு அல்லது ஆய்வுச் செயன்முறை என்று கூறுகிறோம். ஆய்வினை திட்டமிடலிருந்து ஆய்வினை நிறைவேற்றும் வரை ஆய்வாளர் பின்பற்ற வேண்டிய சில ஒழுங்கு விதிகள் உள்ளன. இதனையே ஆய்வு ஒழுக்கவியல் என்பர். ஆய்வுச் செயன்முறையில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய இவ்வாய்வு ஒழுக்கவியல் பற்றிய விடயங்கள், குறிப்பாக கல்விசார் ஆய்வுகளுடன் தொடர்புபடுத்தி இக் கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகிறது.


ஆய்வு ஒழுக்கம்  என்றால் என்ன?

Ethics எனும் ஆங்கிலப் பதமானது, நன்னெறி, நெறிமுறை, ஒழுக்கவியல் எனும் பதங்கள் கொண்டு பொருள் கொள்ளப்படுகிறது. அதாவது ஒரு காரியத்தை மேற்கொள்ளும்போது பின்பற்றி ஒழுக வேண்டிய தார்மீக விடயங்களை  இது குறித்து நிற்கிறது. அதாவது, ஒரு விடயத்தை சரியான முறையில்  மேற்கொள்ள,கட்டாயமாகப் பின்பற்ற வேண்டிய நியமங்கள், விதிமுறைகள் ஆகியவற்றை இது குறித்து நிற்கிறது.  
இந்த பின்னணியில் Research Ethics எனும் ஆய்வு ஒழுக்கவியல் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.  ஆய்வினை மேற்கொள்ளும் போது, அதன் ஒவ்வொரு படிநிலைகளிலும் பின்பற்றி ஒழுக வேண்டிய தார்மீக விடயங்களே ஆய்வு ஒழுக்கம் என இலகுவாக வரைவிலக்கணம் செய்து கொள்ளமுடிகிறது. ஆய்வின் ஒவ்வொரு நிலைகளிலும் எவற்றை  செய்ய வேண்டும், எவற்றை  செய்யக் கூடாது என்பதை விளங்கி அதன்படி நடப்பதே ஆய்வு ஒழுக்கம் எனலாம். அதாவது, ஆய்வுகளில் ஈடுபடும் போது ஆய்வுடன் தொடர்புறும் மனித விடயங்கள் தொடர்பான  பாதுகாப்பு, தரவைக் கையாளுதல் மற்றும் ஆய்வு முடிவுகளைப் பரப்புதல் உள்ளிட்ட ஆய்வின் செயலாலொழுங்கை நிர்வகிக்கும் கொள்கைகள் (Policies) மற்றும் வழிகாட்டுதல்களை (Guidelines) ஆய்வு ஒழுக்கம் எனலாம். எனவே ஆய்வினை பொறுப்பான முறையில்  மேற்கொள்வதற்கான  வழிகாட்டுதல்களை இந்த ஆய்வு ஒழுக்கவியல்  வழங்குகிறது. இதன் மூலம் ஆய்வினில் ஓர் உயர் ஒழுக்க(நன்னெறி) நியமம் ஒன்று கட்டியெழுப்பப்படுகிறது. ஆய்வு ஒன்றினை நேர்மையாக மேற்கொள்வதற்க்கான வழிகாட்டுதல்களையும் இவ்வாய்வு ஒழுக்கம் வழங்குகிறது என்றால் அது மிகை இல்லை.


ஆய்வு ஒழுக்கத்தின் முக்கியத்துவம் 

ஆய்வில் ஈடுபடும் எமக்கு இக்கேள்வி அடிக்கடி எழக்கூடும். ஆய்வில் பல்வறு நபர்கள் பங்குகொள்வார்கள். அது தனிநபர்களாக இருக்கலாம் அல்லது சமூகங்களாக இருக்கலாம். இவர்களிடம் இருந்து பெறுகின்ற தரவுகள், தகவல்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஆய்வாளர்களுக்கு உண்டு. இவற்றை, பாதுகாப்பதன் ஊடாக ஆய்வாளரும் தன்னையும் தனது ஆய்வினையும் பாதுகாத்து கொள்ள கூடியதாகவும் இருக்கும். ஆய்வாளர்களுக்கு ஆய்வொன்றை மேற்கொள்ளும் போது, எவற்றை செய்ய வேண்டும், எவற்றை செய்யக் கூடாது எனபதில் தெளிவான வழிகாட்டுதல்கள் இருத்தல் அவசியம். இதனை ஆய்வு தொடர்பான நியமங்கள், வழிகாட்டுதல்கள் வழங்குகின்றன. இவை, ஆய்வு தொடர்பான உயர் ஒழுக்க நியமத்தை உறுதிபடுத்துவதற்கான விடயங்களை ஆய்வாளர்களுக்கு கல்வி புகட்டவும், கண்காணிக்கவும் செய்கிறது.  இதன் மூலம், ஆய்வாளர், தனது ஆய்வினை பொறுப்பான முறையில்  மேற்கொள்ள இயலுமாகின்றது.  ஆய்வொழுக்கம், ஆய்வில் பங்குபற்றும் மனிதர்கள், விலங்குகளின் பாதுகாப்பு, தரவு சேகரிப்பதில் , ஆய்வு முடிவுகளை வெளியிடுதல் என்பனவற்றில் பின்பற்றப்பட வேண்டிய விடயங்களுக்குரிய தெளிவான வழிகாட்டுதல்களை தருகின்றது எனலாம். அதேபோன்று, ஆய்வின் மூலம் பெறப்படும் அறிவின் துல்லியத் தன்மையினை உறுதி செய்து கொள்ளவும் ஆய்வு ஒழுக்கம் எமக்கு உதவுகின்றது. மேலும். ஆய்வுச் செயன்முறையில் பல்வேறு புலமைசார் சொத்துக்களை நாம் பயன்படுத்த வேண்டிய சந்தர்பங்கள் அதிகம் ஆகும். அத்தகைய சூழமைவில், புலமைசார் சொத்துக்களை பாதுகாப்பதற்க்கான வழிமுறைகளையும் இவ்வாய்வு ஒழுக்கம் எமக்கு கற்றுத் தருகிறது. 


ஆய்வு ஒழுக்கம் யாருக்கு தேவையாகின்றது?  

ஆய்வொன்றை மேற்கொள்பவரை விட, அவ்வாய்வில் பங்குபெறும் மனிதர்கள் (ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள்...), விலங்குகள் ஆகியவற்றின் உரிமைகளை பாதுகாப்பதற்கு ஆய்வொழுக்கம் தேவையாகின்றது.  ஆய்வில் தரவுகளை பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்தப்படும் மனிதர்களின் வாழ்வு உரிமைகள், கண்ணியம், இரகசியத்தன்மை, பிரத்தியேக தகவல்கள் போன்றவற்றை பேணிப் பாதுகாப்பதற்கும், விலங்குகளின் உயிர்காப்பு விடயங்களுக்கும் இந்த ஆய்வு ஒழுக்கம் பாதுகாப்பாக அமைகின்றது.


ஆய்வு ஒழுக்கம் பேணப்பட வேண்டிய பிரதான பகுதிகள்

ஆய்வொன்றை திட்டமிடுவதில் இருந்து ஆய்வினை மேற்கொள்ளும் ஒவ்வொரு கட்டங்களிலும் ஆய்வு ஒழுக்கத்தினை பின்பற்றுதல் அவசியமாகும். குறிப்பாக, பின்வரும் விடயங்களில் ஆய்வு ஒழுக்கத்தினை பின்பற்ற வேண்டும்:  

  1.  மனித விடயங்களை கையாளுதல் - Human Subjects
  2. விலங்குகள் தொடர்பான விடயங்கள் - Animal subjects
  3. தரவுகளைக் கையாளுதல் - Handling of Data 
  4. ஆய்வு முடிவுகளைப் பரப்புதல் - Dissemination of research results

மனித விடயங்களை கையாளுதல் தொடர்பான விடயங்கள்

மனிதர்களை உள்ளடக்கிய வகையில் ஆய்வினை  மேற்கொள்ளும்போது ஆய்வு  ஒழுக்க நெறிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பல்வேறு நபர்களின் [ஆசிரியர்கள், அதிபர்கள், பெற்றோர்கள்,மாணவர்கள்...] கெளரவம், மரியாதை, நன்மை, தனிப்பட்ட விவகாரங்கள் ஆகியவற்றுக்கு பங்கம் விளைவிக்காத வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.  ஆய்வுகளில் ஈடுபடும் நபர்கள், ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பல்வேறு மனிதர்கள் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை முற்கூட்டியே செய்ய வேண்டும். ஆய்வில் உள்ளடக்கபடும் நபர்கள்  வெறும் சடப் பொருட்களாக கருதாமல் அவர்களை பங்குபற்றுனர்களாக கருத வேண்டும். அவர்களுக்கு உடல், உள, சமூக, பொருளாதார, சட்ட ரீதியான பாதிப்புகள் ஏற்படாமல் உறுதி செய்தல் வேண்டும்.  இதற்காக,  பல்கலைக்கழகங்களில் / நிறுவனங்களில் / நாட்டில் உள்ள ஆய்வு ஒழுக்கசபைகளில் உரிய அனுமதிகளைப்  பெறப்படல் வேண்டும். 

விலங்குகள் தொடர்பான விடயங்கள் 

விலங்குகளை  உள்ளடக்கிய வகையில் ஆய்வினை  மேற்கொள்ளும்போதும் ஆய்வு  நெறிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும். விலங்குகளின் பாதுகாப்பு, அவற்றின் வாழ்வுரிமைகளை பாதுகாத்தல், அவற்றினால் மனிதர்களுக்கு தீய விளைவுகள் ஏற்பாடாத வகையில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக,  பல்கலைக்கழகங்களில் / நிறுவனங்களில் / நாட்டில் உள்ள ஆய்வு ஒழுக்கசபைகளில் உரிய அனுமதிகளைப்  பெறப்படல் வேண்டும். 

தரவுகளை கையாளுதல் 

தரவுகளை சேகரித்து பயன்படுத்தும் போது ஆய்வு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தரவு சேகரிக்கப்படும் நபர்களுக்கான மரியாதை, நன்மை, நீதி மற்றும் ஒருமைப்பாடு போன்ற நெறிமுறைக் கோட்பாடுகளின்படி தரவுகளை சேகரித்தல் வேண்டும். தனிநபர்களின் தனியுரிமை (பிரத்தியேக வாழ்க்கை), கெளரவம் நம்பிக்கை, பாதுகாப்பு  என்பன உறுதி செய்யப்படல் வேண்டும்.  தரவுகளை சேகரிக்கும் போது, அல்லது அவற்றை பகுப்பாய்வு செய்து வியாக்கியானம் செய்யும் போது, ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மனிதர்களின் உடல், உள, சமூக, பொருளாதார, சட்ட ரீதியான விடயங்களில் எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தரவுகளைக் கையாள வேண்டும். 

ஆய்வு முடிவுகளைப் பரப்புதல் 

ஆய்வுச் செயன்முறையின் முக்கியமான படிநிலை, ஆய்வு முடிவுகளை வெளியிடுவதாகும், இதனைப் பல்வேறு வழிகளில் ஆய்வாளர்கள் மேற்கொள்வர். இதன்போது, [ஆய்வின் முடிவுகளை பகிர்ந்து கொள்ளும்போது] ஆய்வு ஒழுக்கநெறிமுறைகளை கவனமாக, ஆய்வாளர் பின்பற்றவேண்டும்.  ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மனிதர்களின் உடல், உள, சமூக, பொருளாதார, சட்ட ரீதியான விடயங்களில் எதுவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆய்வு முடிவுகள் பகிரப்பட வேண்டும்.  அதேபோன்று, ஆய்வின் முடிவுகள் துல்லியமாக இருப்பதையும் ஆய்வாளர் உறுதி செய்தல் வேண்டும். 

ஆய்வு ஒழுக்கத்தில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய சில அடிப்படைகள் 

  1. ஆய்வுக்கான அனுமதியை பெறல் [Gaining access and Acceptance]: ஆய்வொன்றை தொடங்கும் போது, ஆய்வுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகள், நிறுவனத்தலைவர்களிடம் இருந்து முறையான அனுமதி பெறல் வேண்டும். இதன்போது  உங்கள் ஆய்வு நோக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தினை அவர்களுக்கு வழங்குதல் அவசியம். அனுமதியை பெறும்போது, அவற்றை எழுத்துமூல அனுமதியாக பெறுதல் மிக அவசியமாகும் 
  2. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களுக்கு ஆய்வு விபரங்களைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். ஆய்வாளர், தரவு சேகரிப்பதற்காக பயன்படுதுகின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்ற ஆய்வின் பங்கேற்பாளர்களுக்கு, பின்வரும் விடயங்கள் தொடர்பான விளக்கங்களை அளித்தல் வேண்டும்: 
  • ஆய்வின்  தன்மை மற்றும் நோக்கங்கள்.
  • குறித்த ஆய்வில்  அவர்களின் பங்கேற்பு எப்படி இருக்கும்
  • குறித்த ஆய்வில் பங்கேற்பதன் ஊடாக ஏதேனும் அபாயங்கள் ஏற்படுமா அல்லது கிடைக்கும் நன்மைகள் என்ன
  • குறித்த ஆய்வின் உத்தேச  முடிவுகள் என்னவாக இருக்கும்
  • அம்முடிவுகள்  எவ்வாறு பயன்படுத்தப்படும்
3. பங்கேற்பாளர்களின் தகவலறிந்த ஒப்புதல் "ஒப்புதல் படிவத்தை" பயன்படுத்துவதன் மூலம் பெற வேண்டும். தரவு சேகரிப்பதற்காக பயன்படுதுகின்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்ற ஆய்வின் பங்கேற்பாளர்கள், குறித்த ஆய்வு தொடர்பாக அவர்கள் அறிந்து கொண்டதாகவும், தரவுகளை வழங்குவதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் ஓப்புதல் படிவத்தில் உறுதி மொழி பெறப்படல் வேண்டும். 
4. மேலும், குறித்த ஒப்புதல் படிவத்தில் பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பு தன்னார்வமாக இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.
5. ஆய்வுகளில் சிறு பிள்ளைகள் ஈடுபடுத்தப்படுவார்களாயின், அவர்கள் தொடர்பாக ஆய்வாளர்கள்  சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்களை ஆய்வில் ஈடுபடுத்தும் போது,  மனவெழுச்சி  அல்லது உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பது முக்கியமாகும்.  
6. எந்தவொரு உடல் அல்லது மனவெழுச்சி ரீதியான தீங்கையும் ஏற்படுத்தும் வகையில்  மனித பங்கேற்பாளர்களை ஈடுபடுத்துவது  மிகவும் நெறிமுறையற்றது. எனவே  எதிர்பார்க்கக்கூடிய ஏதேனும் அபாயங்கள், அசெளகரியங்களை  பங்கேற்பாளர்களுக்கு முன்பே தெளிவாக விளக்கப்பட வேண்டும். 
7. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களின் தனியுரிமையை ஆக்கிரமிப்பதைத் தவிர்ப்பது முக்கியமாகும்.  அதாவது, ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்கள் தங்களைப் பற்றிய சில தகவல்களை வெளிப்படுத்தாமல் இருக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை ஆய்வாளர் விளங்கி இருத்தல்வேண்டும்.
8. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களின் ரகசியத்தன்மை மற்றும் அநாமதேயத்தை உறுதிப்படுத்துதல் வேண்டும். அனைத்து தரவுகளும் ரகசியமாக வைக்கப்படும் என்றும், ஆராய்ச்சி நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் பங்கேற்பாளருக்கு ஆய்வாளர் உறுதியளிக்க வேண்டும். அறிக்கையிடும்  போது புனைப்பெயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பங்கேற்பாளர்களின் அநாமதேயத்தை பராமரிக்க முடியும்.
9. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்களை ஏமாற்றுதல் மற்றும் காட்டிக்கொடுப்பதைத் தவிர்ப்பது அவசியம்மாகும்.  ஆய்வாளர் ஆய்வின் உண்மையான நோக்கங்களை மறைப்பதில் இருந்து மற்றும் / அல்லது பங்கேற்பாளர்களுக்கு தவறான தகவல்களைத் தருவதைத் தவிர்க்க வேண்டும். 
10. ஆய்வில் ஈடுபடுத்தப்படும் பங்கேற்பாளர்கள்,  ஆய்வு முடிவுகள் பற்றி - முழுமையாக அறிந்து கொள்ளும் உரிமை உள்ளது என்பதை ஆய்வாளர் தெரிந்து இருத்தல் வேண்டும். 

ஆய்வு ஒழுக்கம் தொடர்பான ஒழுக்கநெறிக் கோவைகள் 

ஆய்வொன்றில் எத்தகைய ஒழுக்கநெறிகள் பின்பற்றப்படல் வேண்டும் என்பது தொடர்பாக, உங்கள் நாட்டில், நிறுவனத்தில் பிரத்தியேகமான வழிகாட்டல்கள் உள்ளனவா என ஆய்வாளர் அறிந்து இருத்தல் அவசியம். உதாரணமாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு தொடர்பான ஒழுக்கவியல் வழிகாட்டல்கள் https://ou.ac.lk/ethics-review-policy/#:~:text=The%20primary%20objective%20of%20the,participants%20should%20never%20be%20permitted. தரப்படுள்ளன.  இதே போன்று, ஆய்வுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தமக்கே உரித்தான வழிகாட்டல்களை தந்திருப்பார்கள். அவற்றை அறிந்து அதற்கேற்ப ஆய்வாளர்கள் ஒழுக வேண்டும். பின்வருவன ஆய்வு ஒழுக்கவியல் தொடர்பான சர்வதேச வழிகாட்டல்கள் ஆகும்: 

ஆய்வு ஒழுக்கத்தில் ஆய்வாளர் கொண்டிருக்க வேண்டிய பண்புகள் 

ஆய்வாளர் ஆய்வொன்றை மேற்கொள்ளும் போது,  பின்வரும் ஆய்வு ஒழுக்கப்பண்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும்: 
  1.  நேர்மை (Honest): தரவுபெறுபேறுகள்ஆய்வு முறைகள் மற்றும் ஆய்வு செயன்முறைகள்  மற்றும் பிரசுர  நிலைமையினை பற்றி  நேர்மையாக அறிக்கையிடுதல் வேண்டும். தரவுகளை இட்டுக்கட்டுதல்பொய்யுரைத்தல்  அல்லது தவறாக சித்தரித்தல் என்பன அறவே கூடாது
  2. புறவயத்தன்மை (Objectivity): பரிசோதனை வடிவம்தரவு பகுப்பாய்வுதரவு வியாக்கியானம்சகபாடி மதிப்பாய்வுதனிப்பட்ட  முடிவுகள்மானியத்துக்காக  எழுதுதல்நிபுணர் சாட்சியம் மற்றும் ஆராய்ச்சியின் பிற அம்சங்களில் பக்கச்சார்புகளைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
  3. நாணயம் (Integrity): ஆய்வு செயன்முறைகளில் நீங்கள் மேற்கொள்ளும் உங்கள் வாக்குறுதிகள் மற்றும் ஒப்பந்தங்களை பேணுங்கள்நேர்மையுடன் செயல்படுங்கள்ஆய்வு தொடர்பான உங்கள் சிந்தனை மற்றும் நடவடிக்கைகளில் நிலைத்தன்மையினை பேணுங்கள் .
  4. அக்கறையுடன் செயற்படல் (Carefulness): ஆய்வுகளை மேற்கொள்கையில் கவனக்குறைவான பிழைகள் மற்றும் அலட்சியம் ஆகியவற்றைத் தவிர்க்கவும்உங்கள் சொந்த வேலையையும் உங்கள் சகாக்களின் பணியையும் கவனமாகவும் விமர்சனரீதியாகவும் ஆராயுங்கள். ஆய்வு நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் பதிந்து வைத்து கொள்ளுங்கள்  
  5. திறந்ததன்மை (Openness: ஆய்வுடன் தொடர்பான தரவுதரவு பகுப்பாய்வு முடிவுகள்யோசனைகள்ஆய்வு கருவிகள்ஆய்வு வளங்களை பற்றி பிறருடன் கலந்துரையாடுங்கள்.  அதன்போது கிடைக்கும்  விமர்சனங்களையும்  புதிய யோசனைகளையும் எப்போதும் ஏற்றுக்கொள்ளுங்கள்.
  6. புலமைசார் சொத்துக்களை மதித்தல் (Respect for Intellectual Property): காப்புரிமை (patents)பதிப்புரிமை (copyrights) மற்றும் பிற புலமைசார் சொத்துக்களை மதிக்ககற்றுக் கொள்ளுங்கள் . வெளியிடப்படாத தரவுஆய்வு  முறைகள் அல்லது ஆய்வு முடிவுகளை அவற்றை மேற்கொண்ட நபர்/நபர்களின் அனுமதியின்றி பயன்படுத்த வேண்டாம். உரிய முறையில் உரியவர்களை மேற்கோள்  காட்ட வேண்டிய இடத்தில் மேற்கோள் காட்டவும். ஒருபோதும் இலக்கிய திருட்டில் ஈடுபட  வேண்டாம்.
  7. நம்பகத்தன்மை/இரகசியம்பேணல் (Confidentiality): ஆய்வில் ஈடுபடும் போது தரவுகளை பெற்றுக்கொண்டவர்களின் தகவல்களை அல்லது பதிவுகளை இரகசியமாக பாதுகாக்கவும்
  8. பொறுப்பான வெளியீடு (Responsible Publication): ஆய்வின் இறுதி நோக்கம் அவற்றை பிரசுரிப்பதே ஆகும். இதன்போது, உங்கள் சொந்த வாண்மை  வாழ்க்கையை மட்டும் முன்னேற்றுவதை கருத்தில் கொள்ளாமல் ஆராய்ச்சி மற்றும் அறிவினை  முன்னேற்றுவதற்காகவும் ஆய்வுகளை பிரசுரிக்குக. தேவையற்ற  மற்றும் நகல் வெளியீட்டைத் தவிர்க்கவும்.
  9. பொறுப்பான வழிகாட்டல்களைச் செய்தல் (Responsible Mentoring): ஆய்வி ஈடுபாடு காட்டும் உங்களிடம் ஆய்வு முறைகளை பயிலுவதற்காக பலர் முன்வரலாம். இதன்போது, உங்களிடம் பயிலுவோருக்கு ஆய்வு தொடர்பாக தேவையான அறிவூட்டல்கள் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளை வழங்க உதவுங்கள். அதன் போது அவர்களின் நலனை ஊக்குவிக்கவும்அவர்கள் தாமாகவே  தீர்மானம் மேற்கொள்வதை  அனுமதிக்கவும்.
  10. சக பணியாளரை மதித்தல் (Respect for Colleagues): ஆய்வுச் செயன்முறையில் சில நேரங்களில், எம்முடன் இணைந்து பலர் செயலாற்ற முன்வந்திருப்பர். அவர்களை நீதமான முறையில் மதிக்கவும், கருத்து வேறுபாடுகளை மதிக்கவும்  கற்றுக் கொள்ளுங்கள்
  11. சமூக பொறுப்புணர்வு (Social Responsibility): ஆராய்ச்சிபொதுக் கல்வி மற்றும் ஆலோசனை வழங்கல் ஆகியவற்றின் மூலம் சமூக நன்மைகளை ஊக்குவிக்கவும் சமூக தீங்குகளைத் தடுக்கவும் குறைக்கவும் பாடுபடுங்கள்.
  12. பாகுபாடு கட்டாதிருத்தல் (Non-Discrimination): ஆய்வுச் செயன்முறையின் போது , ஆய்வாளர்கள் தமது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி, நடுநிலையில் நடந்து கொள்ளல் வேண்டும். ஆய்வின் போது, ஆய்வு செயன்முறைகளில் ஈடுபடும் பல்வேறு நபர்களை பாகுபாடு காட்டாது நடுநிலைமையில் நடந்து கொள்ளல் வேண்டும்.
  13. திறன்/ தேர்ச்சி (Competence): ஆய்வுகளை மேற்கொள்வதன் ஊடாக உங்கள் வாண்மைத் தேர்ச்சிகளை விருத்தி செய்து கொள்வதுடன் வாழ்நாள் முழுவதும் கல்வி மற்றும் கற்றல் மூலம் உங்களை விருத்தி செய்து கொள்ளவும்
  14. சட்டபூர்வத்தன்மை (Legality). ஆய்வினை மேற்கொள்கையில், அது தொடர்புடைய சட்டங்கள் மற்றும் நிறுவன மற்றும் அரசாங்க கொள்கைகளை அறிந்து அவற்றுக்கு ஏற்ப ஆய்வுகளை மேற்கொள்ளல் வேண்டும்.
  15. விலங்கு பராமரிப்பு (Animal Care): ஆய்வுகளில் விலங்குகளை பயன்படுத்தும்போது அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல் அவற்றை சரியாக பராமரித்தல் வேண்டும். தேவையற்ற அல்லது மோசமாக வடிவமைக்கப்பட்ட விலங்கு பரிசோதனைகளை நடத்துதல் அறவே கூடாது.
  16. மனித விடய பாதுகாப்பு (Human Subjects Protection): மனிதர்களை உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும் போதுஅவர்களுக்கு ஏற்படும்   தீங்குகளையும் அபாயங்களையும் குறைத்து நன்மைகளை அதிகரிக்கவும்அவர்களது கெளரவம்தனியுரிமை மற்றும் சுயாட்சியை மதிக்கக் கூடிய வகையில் ஆய்வு செயலொழுங்குகள் அமைதல் வேண்டும்.

ஆய்வு தொடர்பான தவறான நடத்தைகள்/முறைகேடுகள்

ஆய்வுகளை மேற்கொள்ளும் போது பின்வரும் முறைகேடுகள் அல்லது தவறான நடைத்தை களில் ஆய்வாளர் ஈடுபடக் கூடாது:  

  •  புனைதல் (Fabrication) : ஆய்வு செயன்முறையில் ஆய்வு குறிக்கோள்களை அடையும் பொருட்டு அதற்கேற்ற  தரவு அல்லது ஆய்வு முடிவுகளை உருவாக்குதல் மற்றும் அவற்றைப் பதிவுசெய்தல் அல்லது அறிக்கையிடல் புனைதல் எனப்படும். இவை கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.
  •  பொய்மைப்படுத்தல் (Falsification): ஆய்வினை மேற்கொள்ளும் தருவாயில் ஆய்வு கருவிகளை தவறான முறையில் பயன்படுத்துவது, அல்லது தரவு அல்லது முடிவுகளை மாற்றி அமைப்பது  அல்லது தவிர்ப்பது போன்றன பொய்மைப்படுத்தல் எனப்படும்  இதுவும், கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்.
  • நகலாக்கம்/கருத்து திருட்டு (Plagiarism - மற்றொரு புலமையாளரின்  யோசனைகள், ஆய்வு செயல்முறைகள், ஆய்வு முடிவுகள் அல்லது கட்டுரை வாசகங்கள்  பொருத்தமான முறையில் மேற்கோள் காட்டாமல் தனது சொந்த ஆய்வு விடயம் போல் கையகப்படுத்துதல்.இதுவும் ஆய்வுகளில்  ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

முடிவுரை

ஆய்வுகளில் ஈடுபடும் நாம், ஆய்வுகளினை நேர்மையான முறையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை ஆய்வு ஒழுக்கம் எமக்கு கற்று தருகிறது. எனவே, ஆய்வு செயன்முறையில் உள்ள திட்டமிடல், தரவுகளை சேகரித்தல், பகுப்பாய்வு மற்றும் வியாக்கியானம் செய்தல், அவற்றி அறிக்கையிடல் ஆகிய பல்வேறு கட்டங்களில் பின்பற்றவேண்டிய நடைமுறைகளை சரிவர ஒழுகி ஆய்வினை மேற்கொள்ளுதல் முக்கியமாகும்.

உசாத்துணை


இக்கட்டுரையில் உள்ள சில விடயங்கள் பின்வரும் இணையதள கட்டுரையினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாகும். 
Research methods: https://libguides.library.cityu.edu.hk/researchmethods

விழுமியக் கல்வி

விழுமியக் கல்வி  Value Education  எப்.எம்.நவாஸ்தீன்  இலங்கை திறந்த பல்கலைக்கழகம் 1. அறிமுகம். உலகின் அண்மைக்காலமாக விழுமியக் கல்வி பற்றி...